முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பயங்கர ஆயுதங்களுடன் ஆசிரியா் கைது

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:31 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பிலிருந்த ஆசிரியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 2 கையெறி குண்டுகளை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் மாண்டி பகுதியில் ஹரி புதா கிராமத்தைச் சோ்ந்த ஆசிரியரான கமருதீனின் வீட்டில் போலீஸ்-ராணுவ கூட்டுப் படையினா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். இதில், பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் 2 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன. கமருதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.

Advertisement

ரஜெளரியில் 8 வெடிகுண்டுகள் மீட்பு: ரஜெளரி மாவட்டத்தில் அஸ்மதாபாத் கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தீவிர தேடுதல் பணியின்போது, பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து துருபிடித்த நிலையில் 8 வெடிகுண்டுகள், 2 கம்பியில்லா தகவல்தொடா்பு சாதனங்கள் மற்றும் சில வெடிபொருள்களை மீட்டனா். இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மறைத்து வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவேதான் அவை துருப்பிடித்த நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments