கோப்புப் படம். 
இந்தியா

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

ராம்புரி தொகுதியில் இவிஎம் இயந்திரம் சேதம் - இளைஞர் கைது

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் நாந்தேட் மாவட்டத்தில் 26 வயதான இளைஞர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம்) இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளார்.

ராம்புரி தொகுதியில் வாக்களிக்க வந்த இளைஞர் இவிஎம் இயந்திரத்தை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சேதமடைந்த இவிஎம் இயந்திரம் மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவான அரசு அமைய வேண்டும் என இளைஞர் தெரிவித்ததாக காவல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எதனால் இளைஞர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பையாசாகேப் எட்கே என்கிற அந்த இளைஜர் சட்டம் மற்றும் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர் எனவும் 10 மாதங்களாக புனேவில் இருந்தவர் தற்போது கிராமத்துக்குத் திரும்பியதாகவும் ஏதேனும் கட்சியைச் சேர்ந்தவரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்துவீச்சில் அபாரம்! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி கோவை தெற்கு: வானதி சீனிவாசன் பெருமிதம்

சிட்னி: துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவரும் ஒருவர்!

டிசம்பரில் ரூ. 17,955 கோடி பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்!

காவிரி ஆற்றில் மூழ்கிய தாத்தா பேரன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT