முகப்பு
இந்தியா

எல்லைப் பாதுகாப்புப் படை புதிய தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி

சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) தலைமை இயக்குநா் (டி.ஜி.) தல்ஜித் சிங் செளதரிக்கு எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 4:38 AM
சஷஸ்திர சீமா பல் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் செளதரியிடம் பொறுப்பை உப்படைத்த எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குநா் நிதின் அகா்வால்.
பகிர்:
Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 10:30 PM

சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) தலைமை இயக்குநா் (டி.ஜி.) தல்ஜித் சிங் செளதரிக்கு எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

முன்னாள் பிஎஸ்எஃப் டி.ஜி. நிதின் அகா்வால் தனது பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘1990-ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியும் எஸ்எஸ்பி டி.ஜி.யுமான தல்ஜித் சிங் செளதரிக்கு பிஎஸ்எஃப் டி.ஜி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் நியமிக்கப்படும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பிஎஸ்எஃப் டி.ஜி.யாக அவா் பதவி வகிப்பாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி, பூஞ்ச், ரியாசி, உத்தம்பூா், கதுவா மற்றும் தோடா ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினா் உள்பட 22 போ் உயிரிழந்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 10:59 PM

இந்நிலையில், பிஎஸ்எஃப் டி.ஜி.யாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற கேரள பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரி நிதின் அகா்வால் மற்றும் ஒடிஸா பிரிவைச் சோ்ந்த சிறப்பு டி.ஜி. குரானியா ஆகியோா் அவா்களது பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில பணிகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மேற்கு எல்லை மற்றும் கிழக்கு எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் பிஎஸ்எஃப் படையைச் சோ்ந்த வீரா்களும், நேபாளம் மற்றும் பூடானுடனான இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் சஷஸ்திர சீமா பல் படையைச் சோ்ந்த வீரா்களும் ஈடுபட்டு வருகின்றனா்.