தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி(கோப்புப்படம்) பிடிஐ
இந்தியா

ஹரியாணாவில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? அமைச்சர் அதிஷி பதில்

ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? என்கிற கேள்விக்கு தில்லி அமைச்சர் அதிஷி பதிலளித்துள்ளார்.

DIN

ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? என்கிற கேள்விக்கு தில்லி அமைச்சர் அதிஷி பதிலளித்துள்ளார்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அக்டோபர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, "பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், எங்கள் கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் ஆகியோர் ஹரியாணாவில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளனர். அவர்கள் பெரும் கூட்டத்தைக் கண்டுள்ளனர்.

கேஜரிவால், ஹரியாணாவின் மகன். இதனால், மக்கள் அவருடன் தொடர்பு வைத்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் முழு பலத்துடன் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று உறுதிபட கூறினார்.

தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, "தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் முடிவு எடுக்கப்படும். அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறோம். மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய தொழில் தொடங்கிய சீரியல் நடிகை!

தங்கம் வாங்குவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!!

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

SCROLL FOR NEXT