அஸ்வினி வைஷ்ணவ் (கோப்புப் படம்) 
இந்தியா

40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அறிவித்தார் மத்திய அமைச்சர்

10 மாநிலங்களில் புதிய தொழிற்துறை நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

DIN

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் புதிய தொழிற்துறை நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 10 மாநிலங்களில் ரூ. 28,602 கோடி மதிப்பீட்டில் தேசிய தொழிற்துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில்துறை நகரங்கள் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், உத்தரகண்டில் உள்ள குர்பியா, பஞ்சாபில் உள்ள ராஜ்புரா-பட்டியாலா, மகாராஷ்டிரத்தில் உள்ள திகி, கேரளத்தில் உள்ள பாலக்காடு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பிகாரில் உள்ள கயா, தெலங்கானாவில் உள்ள ஜஹீராபாத், ஆந்திரத்தில் உள்ள ஓர்வகல் மற்றும் கோப்பார்த்தி, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர்-பாலி ஆகிய இடங்களில் தொழிற்துறை பகுதிகள் அமைக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் தொழிற்துறை கட்டமைப்பை மாற்றியமைக்கப்படும்; மேலும், பொருளாதார வளர்ச்சியையும் உலகளாவிய போட்டித்தன்மையையும் கணிசமாக அதிகரிக்கும்.

இவை உலகளாவிய தரத்தின் கிரீன்ஃபீல்ட் ஸ்மார்ட் நகரங்களாக உருவாக்கப்படும்.

மேலும், 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும், 30 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு, சுமார் ரூ. 1.52 லட்சம் கோடி முதலீட்டு திறனை உருவாக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு: அலுவலக நேரங்களை மாற்றிய குருகிராம் அரசு நிா்வாகம்

வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மைத்துனா் விடுவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு!

ஈரானிய பெண்ணின் பணப் பையிலிருந்த 1,600 அமெரிக்க டாலா்கள் திருட்டு! பேருந்து உதவியாளா் கைது!

வாகன திருட்டு வழக்கில் ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏஎஸ்ஐ கைது

SCROLL FOR NEXT