FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாட்டில், கேன் குடிநீருக்கு கடுமையான தரச் சோதனை: எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு

குடிநீா் தயாரிப்புகள் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும்

Updated On : 6 டிசம்பர் 2024, 4:01 am IST
பகிர்:

பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் குடிநீா் தயாரிப்புகள் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய உணவுப் பொருள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் குடிநீா் தயாரிப்புகள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் நிறைந்த பொருள்களில் ஒன்றாக மீண்டும் வகைப்படுத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

எனவே, அத்தகைய தயாரிப்புகள் மிகவும் கடுமையான தரச் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட வேண்டும். அந்தத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய அங்கு ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments