ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து 3 பேரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு
ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து 3 பேரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு நிலவியது.
ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து 3 பேரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு நிலவியது.
ராஜஸ்தான் மாநிலம், வித்யாதர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு காலனிக்குள் சனிக்கிழமை புகுந்த சிறுத்தை திடீரென அங்கிருந்தவர்களைத் தாக்கியது. இச்சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் வனத்துறையினர், போலீஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த சிறுத்தை அமைதிப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை துணை காப்பாளர் ஜெகதீஷ் குப்தா கூறியதாவது: வித்யாதர் நகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தது.
போலீஸ் காவலில் இருந்த நபர் மரணம்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விடுவிப்பு!
அந்த சிறுத்தை மத்திய பொதுப்பணித் துறை தோட்டத்தில் உள்ள செடிகளுக்குப் பின்னால் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலில் காணப்பட்டது.
அப்போது சாலையில் இறங்கிய சிறுத்தை 3 பேரைத் தாக்கியது. அங்கிருந்தவர்களில் சிலர் அந்த சிறுத்தையை துரத்திச் சென்று படம்பிடித்தனர்.
பின்னர் சிறுத்தை அமைதிப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டது. நஹர்கர் வனப்பகுதியின் பெரும்பகுதி வித்யாதர் நகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவேதான், உணவு அல்லது தண்ணீரைத் தேடி அவ்வப்போது சிறுத்தை உலா வருகிறது என்றார்.