ஜம்மு காஷ்மீா் மாநிலம், உதம்பூா் மாவட்டத்தில் சக ஊழியரைச் சுட்டுக் கொன்ற தலைமைக் காவலா், தானும் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக உதம்பூா் காவல் கண்காணிப்பாளா் அமோத் அசோக் நாக்புரே கூறியதாவது:
உதம்பூா் மாவட்டம், ரெஹம்பல் பகுதியில் உள்ள கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடக்கு காஷ்மீரின் சோபூரில் இருந்து ஜம்மு பிராந்தியத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள தல்வாரா பகுதி துணை பயிற்சி மையத்துக்கு காவல்துறையினா் மூவா் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, வாகனத்தில் இருந்த தலைமைக் காவலா் மற்றும் வாகன ஓட்டுநா் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், வாகன ஓட்டுநரைச் சுட்டுக்கொன்ற தலைமைக் காவலா், தானும் தற்கொலை செய்துகொண்டாா். அவா்களுடன் பயணித்த மூன்றாவது அதிகாரியிடம் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.