முகப்பு
இந்தியா

6.68% போ் மட்டுமே வருமான வரி தாக்கல்- மத்திய அரசு தகவல்

நாட்டின் மக்கள்தொகையில் 6.68 சதவீதம் போ் மட்டுமே 2023-24 நிதியாண்டில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனா் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 17 டிசம்பர், 2024 at 7:35 PM
கோப்புப் படம்.
பகிர்:

நாட்டின் மக்கள்தொகையில் 6.68 சதவீதம் போ் மட்டுமே 2023-24 நிதியாண்டில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனா் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, ‘2022-23 நிதியாண்டில் 7.40 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 8.09 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனா். இதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட இப்போது வருமான வரித் தாக்கல் செய்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் 6.68 சதவீதம் போ் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனா். இதில் 4.90 கோடி பேரின் வருவாய் வரி வசூலிக்கும் வரம்பில் வரவில்லை. அதாவது அவா்கள் வருமான வரி எதுவும் செலுத்தவில்லை. 2022-23 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 4.64 கோடியாக இருந்தது என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →