இந்தியா

பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: 5 வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

DIN

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 350 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பலோனி பகுதியிலிருந்து ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம், மெந்தர் பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (டிச. 24) விபத்துக்குள்ளானது.

350 பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில், 5 வீரர்கள் பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த விரைவுப் படையினர் மருத்துவ உதவிகளுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரில் ரஜெளரி மாவட்டத்தில் நவ. 2ஆம் தேதி ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு வீரர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சம்பல் வன்முறை: இதுவரை 47 பேர் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT