குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அஞ்சலி 
இந்தியா

மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அஞ்சலி செலுத்தியது பற்றி...

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.

தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், மன்மோகன் சிங் இல்லத்துக்கு நேரில் வருகைதந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: மு.க. ஸ்டாலின்

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கைக்கழக பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

SCROLL FOR NEXT