இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் PTI
இந்தியா

மோடிக்காக அழைப்புப் பெற அமெரிக்கா சென்றாரா ஜெய்சங்கர்? சுவாமி கிண்டல்!

டிரம்ப் பதவியேற்பு விழா அழைப்பிதழ் பெற அமெரிக்கா சென்ற ஜெய்சங்கர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

DIN

டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் பெற பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்கா அனுப்பியிருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிச.24-29 வரை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெய்சங்கர், அந்நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த பயணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமரிசித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அமரிக்காவுக்கு அனுப்பி, தனக்கு, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழைப் பெற்று வருமாறும், இல்லாவிட்டால் உங்கள் வேலை பறிபோகும் என்று கூறியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார்.

ஆனால், இதுவரை, டொனால்ட் டிரம்ப்புக்கு மோடியை அழைப்பதற்கான எண்ணம் ஏற்படவில்லை என்றும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்துக்கு இடையே, இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, திங்கள்கிழமை, அமெரிக்க அதிகாரிகளுடன் இருதரப்பு உறவு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு

விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் பணி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு

வெற்றியுடன் மீண்டாா் குகேஷ்

SCROLL FOR NEXT