ஏக்நாத் ஷிண்டே 
இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் -மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முழு ஆதரவு

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு முழு ஆதரவளிப்பதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

DIN

புதுதில்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு முழு ஆதரவளிப்பதாக  மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் உயர்மட்டக் குழுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, 

அடிக்கடி தேர்தல் நடத்துவது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல, அது பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும், நகராட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்துவது, தேர்தல் ஆணையம் மற்றும் அரசுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுக்குமான தேர்தல் செலவை குறைக்கும்.  

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டுவந்துள்ள மிக முக்கிய சீர்திருத்தங்களுல் இதுவும் ஒன்று. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சுமூகமான அரசு நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என்று ஆழமாக நம்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

SCROLL FOR NEXT