கோழிக்கோடு அருகே நீரில் அடித்து செல்லப்பட்ட மூவர்
ஆற்றில் மூவரும் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடக்கு கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குன்னமங்கலம் பகுதியில் சிறுவன் உள்பட மூவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சிந்து என்கிற மினி, அவரது மகள் ஆதிரா மற்றும் அவர்களது உறவினர் 13 வயது சிறுவன் அத்வைத் ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
ஆற்றில் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
முதலில் அந்த சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவனைக் காப்பாற்ற சென்ற தாயும் மகளும் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என காவலர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்களைக் காப்பாற்ற இயலவில்லை என காவலர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.