முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மூன்று சகோதரிகள் தீயில் கருகி பலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வீடு தீப்பிடித்ததில் மூன்று சகோதரிகள் தீயில் கருகி பலியாகினர்.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 4:34 AM
Fire at commercial building in Mumbai
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வீடு தீப்பிடித்ததில் மூன்று சகோதரிகள் தீயில் கருகி பலியாகினர்.

உக்ரால் தொகுதியில் உள்ள தன்மஸ்தா-தஜ்னிஹால் கிராமத்தில் உள்ள மூன்று மாடி வீடு அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது.

பாதிக்கப்பட்ட பிஸ்மா (18), சைகா (14) மற்றும் சானியா (11) மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். வீடு முழுவதும் தீ பரவியதால் வெளியேற முடியவில்லை. இந்த நிலையில் அவர்கள் தீயில் கருகி பலியாகினர்.

அவர்களின் உடல்கள் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டன, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →