இந்தியா

காணாமல் போன 3 நாள்களுக்குப் பிறகு பெண் மீட்பு: உயிரற்ற நிலையில்...

ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன பெண் மூன்று நாள்களுக்குப் பிறகு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

DIN

ராஜஸ்தான் ஜாலவார் மாவட்டத்தில், மூன்று நாள்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல், வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக அந்த பகுதி காவலர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை, திறந்த வெளியில் காலை கடனுக்காக வீட்டிலிருந்து சென்ற 14 வயது பெண் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாவனி மண்டி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், பெண்ணின் உடல் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூராய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் பெண்ணின் உடலை ஒப்படைத்த காவலர்கள், இது தற்கொலையா, கொலையா அல்லது விபத்தா என்கிற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT