இந்தியா

காணாமல் போன 3 நாள்களுக்குப் பிறகு பெண் மீட்பு: உயிரற்ற நிலையில்...

ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன பெண் மூன்று நாள்களுக்குப் பிறகு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

DIN

ராஜஸ்தான் ஜாலவார் மாவட்டத்தில், மூன்று நாள்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல், வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக அந்த பகுதி காவலர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை, திறந்த வெளியில் காலை கடனுக்காக வீட்டிலிருந்து சென்ற 14 வயது பெண் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாவனி மண்டி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், பெண்ணின் உடல் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூராய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் பெண்ணின் உடலை ஒப்படைத்த காவலர்கள், இது தற்கொலையா, கொலையா அல்லது விபத்தா என்கிற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

SCROLL FOR NEXT