Delhi
Delhi 
இந்தியா

வீட்டின் மாடியில் நின்ற பெண் மீது குண்டு பாய்ந்தது எப்படி?

DIN

புது தில்லி: வீட்டின் மாடியில் நின்றிருந்த பெண் மீது குண்டு பாய்ந்ததில் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது.

மேற்கு தில்லியில் உள்ள கயாலா பகுதியில் கொண்டாட்டத்தின் பகுதியாக வான்நோக்கி துப்பாக்கி சூடு நிகழ்த்தும்போது அதில் ஒரு குண்டு பெண்ணைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு, திங்கள்கிழமை கல்யாண விழாவின் கொண்டாட்டத்தில் நடந்ததாகவும் ராஜிவ் என்பவர் மீது ஐபிசி-308 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் அதே நாள் கைது செய்யப்பட்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

அந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கின் தன்மை கருதி பாதிக்கப்பட்டவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் சிகிச்சையில் முன்னேறி வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT