இந்தியா

கைதான அரசு அதிகாரியின் வீட்டில் ரொக்கம் மற்றும் நகைகள்... இவ்வளவா?

கையூட்டு பெற முயன்ற பெண் பொறியாளர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

DIN

தெலங்கானா மாநிலத்தில் பெண் நிர்வாக பொறியாளர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.1.51 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ தங்க நகைகள், ரூ.65.5 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக அந்த அதிகாரி அலுவலகத்தில் கையூட்டு பெற முயன்றபோது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்.

உரிமம் பெற்ற ஒப்பந்ததாரரிடம் 84 ஆயிரம் லஞ்சமாக கேட்டு அதனை பெற்ற போது அதிகாரிகளிடம் சிக்கினார் பொறியாளர்.

பழங்குடி நலன் கட்டுமான துறையில் நிர்வாக பொறியாளராக பணியாற்றும் அதிகாரியான இவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை விசாரணையின் பகுதியாக சேர்க்கப்பட்டதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT