குரு ரவிதாஸுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
குரு ரவிதாஸின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
குரு ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது நாடாளுமன்றத் தொகுதியான வாராணசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டு, அவரது உருவச் சிலையைத் திறந்துவைத்தார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாக் கொண்ட குரு ரவிதாஸின் செய்தி ஒவ்வொரு தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும்.
ரவிதாஸ் ஒரு மரியாதைக்குரிய குரு, அவரது போதனைகள் காலப்போக்கில் பெரிய அளவில் பேசப்பட்டது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.