கோப்புப் படம் 
இந்தியா

4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.2.91 கோடி மதிப்புள்ள 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ.2.91 கோடி மதிப்புள்ள 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் ஹைதராபாத் சுங்க அதிகாரிகள் டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் துபாயிலிருந்து வந்த மூன்று பெண்கள் உள்பட 4 பயணிகளை வழிமறித்தில், அவர்களிடமிருந்து 4.597 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் 30 கட்டிகள் மற்றும் 2 செயின்கள் அடங்கும். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலில் தை 14-ஆம் நாள் விழா

நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஜித் பவாா் மறைவு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு: முதல்வா் ரேகா குப்தா

மணிமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT