கோப்புப்படம். 
இந்தியா

காதல் திருமணம் செய்த மகளை குழந்தையுடன் கொன்ற குடும்பத்தினர்!

பிகாரில் மூன்று வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை, கணவர் மற்றும் 2 வயது குழந்தையுடன் சேர்த்து கொலை செய்த தந்தை மற்றும் சகோதரனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

DIN

பிகாரில் உள்ள பகல்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை, அவரது கணவர் மற்றும் 2 வயது குழந்தையுடன் சேர்த்து கொலை செய்த தந்தையையும் சகோதரனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட சாந்தினி குமாரி, அவரது கணவர் சாந்தன் குமார், அவர்களது இரண்டு வயது குழந்தை ரோஷினி குமாரி ஆகியோரை பெண்ணின் தந்த பப்பு சிங் மற்றும் தீரஜ் குமார் ஆகியோர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

கடந்த செவ்வாய்கிழமை மாலை 4.25 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மூவரையும் வழிமறைத்து, இரும்புக் கம்பியால் அடித்து பின் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். 

சம்பவ இடத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக துணைப் பிரிவி காவல் அதிகாரி ஓம் பிரகாஷ் அருண் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

SCROLL FOR NEXT