சிறுத்தை | Pexels 
இந்தியா

ஐடி நிறுவனத்தைச் சுற்றி திரிந்த சிறுத்தை: தேடுதல் பணியில் வனத்துறை

ஐடி நிறுவனத்தைச் சுற்றி வந்த சிறுத்தையைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளாகத்தில் சுற்றி திரிந்த பெண் சிறுத்தை மற்றும் அதன் இரு குட்டிகளைத் தேடும்பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் சிறுத்தை முதலில் செவ்வாய்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சூப்பர் காரிடர் பகுதியில் தென்பட்டது. இன்போசிஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி அது.

அதற்கு அருகில் உள்ள வேளாண் நிலத்தில் புதன்கிழமை சிறுத்தைகளைப் பார்த்ததாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

கோதுமை விளைவிக்கப்பட்ட நிலத்தில் குட்டிகளைப் பாதுகாப்பாக பெண் சிறுத்தை மறைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வட்டார வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இன்போசிஸ் வளாகத்தில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

130 ஏக்கர் அளவில் விரிந்த பகுதியில் அமைந்திருக்கும் இன்போசிஸ் அலுவலகத்தைச் சுற்றி புல் மற்றும் புதர்கள் மண்டி காணப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தின் வணிக தலைநகரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த ஐடி நிறுவனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT