ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிப்பு!
பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சில நீண்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் தொடர்பாக பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ.
இதையும் படிக்க |
Advertisement
Advertisement
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஏர் இந்தியா நிறுவனத்தினால் இயக்கப்படும் விமானங்களின் பாதுகாப்பு மீறல்கள் குறித்து விமான ஊழியர் ஒருவர் கூறிய புகாரைத் தொடர்ந்து விரிவான ஒழுங்குமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட விசாரணைக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என்பதால் அந்நிறுவனத்திற்கு டிஜிசிஏ அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த பாதுகாப்பு அறிக்கையானது ஏர் இந்தியா நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களின் பாதுகாப்புடனும் தொடர்புடையதாகும்.
இதையும் படிக்க |
"குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், டிஜிசிஏ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது ஏர் இந்தியா மீது ரூ. 1.10 கோடி அபராதம் விதித்துள்ளது" என்று டிஜிசிஏ அமைப்பு கூறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.