கோப்புப்படம். 
இந்தியா

குடியரசு தின விழாவில் சாப்பிட்ட 58 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு!

மத்தியப் பிரதேசம் அரசு பள்ளியில் குடியரசு தின விழா நிகழ்வில் அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட 58 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. 

DIN

மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவுகளால் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 

சிர்மாவூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்குப் பின்னர் மாணவர்களுக்கு பூரி-சப்ஜி மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளர். 

இதையடுத்து மாணவர்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து மாணவர்களின் உடல்நிலையும் சீராகிய நிலையில், ஒரு மாணவியில் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் அவர் அரசு சஞ்சய் காந்தி நினைவக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

மேலான சிகிச்சை வழங்குவதற்காக குஷா பாவு தாக்ரே மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஷியாம் ஷா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT