இந்தியா

கர்நாடகத்தில் பள்ளிப் பேருந்து-டிராக்டர் மோதல்: 4 மாணவர்கள் பலி,  8 பேர் காயம்

DIN

கர்நாடகத்தில் பள்ளிப் பேருந்து-டிராக்டர் மோதியதில் மாணவி உள்பட 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவை முடிந்து மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் பயணித்த பேருந்து அழகூர் கிராமம் அருகே இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தபோது டிராக்டருடன் மோதியது. 

இந்த சம்பவத்தில் மாணவி உள்பட 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்தில் சிக்கிய மாணவர்கள் அழகூரில் உள்ள வர்த்தமானா கல்வி நிறுவனத்தில் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

சச்சினின் சாகசப் பயணம்...

ஆக. 15-க்குள் 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடங்கப்படும்: ராகுல் காந்தி

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

ஆர்சிபி பேட்டிங்; மேக்ஸ்வெல் அணியில் இல்லை!

SCROLL FOR NEXT