முகப்பு
இந்தியா

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்ட இந்திய கடற்படைக்கு நன்றி!

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:10 PM
இந்திய கடற்படையால் மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரானியர்கள்
பகிர்:


சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது. 

சோமாலியாவின் கிழக்கு கடலில் சென்றுகொண்டிருந்த ஈரான் நாட்டைச் சேரந்த அல் நயீமி என்ற கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். அந்த கப்பலில் இருந்த 11 பேரையும் சிறை பிடித்தனர். 

இதேபோன்று கடந்த சனிக்கிழமை இம்மான் என்ற பெயருடைய கப்பலையும் சோமாலியர்கள் சிறைபிடித்தனர். அதிலிருந்த பாகிஸ்தான் மற்றும் ஈரானைச் சேர்ந்த 17 பேரை சோமாலியர்கள் சிறைபிடித்தனர். 

இந்திய கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து சிறைபிடிக்கப்பட்ட கப்பலைக் கைப்பற்றி சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவித்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றுமுறை சோமாலியர்களால் கைப்பற்றப்பட்ட படகை  மீட்டு அதில் சிறைபிடிக்கப்பட்டிருந்தவர்களை இந்திய கடற்படை மீட்டது. 

இதனிடையே சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்ட இந்திய கடற்படைக்கு மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நன்றி தெரிவிக்கும் விடியோ வெளியாகியுள்ளது. 

அதில், சோமாலியர்கள் தங்கள் கப்பலை எவ்வாறு சிறைபிடித்தனர் என்பதையும், கடற்படை கப்பலைக் கண்டதும் அவர்கள் நடந்துகொண்ட விதம் பற்றியும் விவரித்துள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →