கனமழை - வெள்ளம் Center-Center-Delhi
இந்தியா

குஜராத்தில் கனமழை, வெள்ளம்; 30 கிராமங்கள் துண்டிப்பு

குஜராத்தில் கனமழை; 30 கிராமங்கள் துண்டிப்பு

DIN

ஜுனாகத்: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், ஜுனாகத் மாவட்டத்தின் 30 கிராமங்கள், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஜுனாகத் மாவட்டத்தின் வந்தாளி கிராமத்தில் 361 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சௌராஷ்டிரம் மற்றும் தெற்கு பகுதிகளில் ஏராளமான தாலுகாக்களில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதனால், அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். பல இடங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் மூழ்கிவிட்டன. இதனால், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அதுபோல, ஜுனாகத் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT