கனமழை - வெள்ளம் Center-Center-Delhi
இந்தியா

குஜராத்தில் கனமழை, வெள்ளம்; 30 கிராமங்கள் துண்டிப்பு

குஜராத்தில் கனமழை; 30 கிராமங்கள் துண்டிப்பு

DIN

ஜுனாகத்: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், ஜுனாகத் மாவட்டத்தின் 30 கிராமங்கள், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஜுனாகத் மாவட்டத்தின் வந்தாளி கிராமத்தில் 361 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சௌராஷ்டிரம் மற்றும் தெற்கு பகுதிகளில் ஏராளமான தாலுகாக்களில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதனால், அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். பல இடங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் மூழ்கிவிட்டன. இதனால், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அதுபோல, ஜுனாகத் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT