கோப்புப் படம். 
இந்தியா

பஞ்சாப்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை

பஞ்சாப்: கேஸ் கட்டர் பயன்படுத்தி ஏடிஎம் உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை

DIN

பஞ்சாபில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பக்வாரா-பலாஹி சாலையில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரம் அமைந்துள்ளது.

சனிக்கிழமை அதிகாலை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டரைப் பயன்படுத்தி உடைத்த கொள்ளையர்கள், ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும் கேஸ் கட்டரின் வெப்பத்தால் ஏடிஎம்மில் இருந்த சில ரூபாய் நோட்டுகளும் எரிந்து நாசமாயின.

பகவாரா காவல் கண்காணிப்பாளர் ரூபிந்தர் கௌர் பாட்டி கூறுகையில், கொள்ளையர்களை கண்டுபிடிக்க அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

பஞ்சாபில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT