மும்பையில் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்!
கனமழையால் மும்பை ரயில் போக்குவரத்து பாதிப்பு
கனமழையால் மும்பை ரயில் போக்குவரத்துச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரங்களும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்யாண் மற்றும் கசாரா இடையேயான பரபரப்பான ரயில் பாதையில் மரங்கள் விழுந்துள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கசாரா மற்றும் டிட்வாலா இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
மத்திய ரயில்வேயின் புறநகர் சேவையை தினமும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துகின்றனர்.