முகப்பு
இந்தியா

அதிகார துஷ்பிரயோகம் செய்த உதவி ஆட்சியர் பணியிட மாற்றம்!

புணேவில் பதவியைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரி பணியிட மாற்றம்

Updated On : 10 ஜூலை, 2024 at 12:32 PM
பகிர்:

அதிகார துஷ்பிரயோகம் செய்த உதவி ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்தியத் தரவரிசையில், 821 ஆவது இடத்தைப் பெற்ற பூஜா கேத்கர், புணேவில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பூஜா, தான் பயன்படுத்தி வந்த `ஆடி’ காரில் `மகாராஷ்டிர அரசு’ என்று குறிப்பிட்டதுடன், சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தன்னுடைய சொந்த காருக்கு பேன்சி பதிவெண்ணும் அளிக்குமாறு அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும், ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரியான பூஜாவின் தந்தையும், பூஜாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பூஜாவின் செயல்கள் குறித்து அறிந்த புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாஸ், மாநில தலைமைச் செயலாளருக்கு, பூஜாவின் செயல்கள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து, பூஜா கேத்கர் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →