இந்தியா

மீட்கப்பட்ட பெண்: பின்னணியில் லவ் ஜிகாத்? கர்நாடகத்தில் தொடங்கும் சர்ச்சை!

தொலைந்து பெண் மீட்கப்பட்ட நிகழ்வில் பெண்ணின் பெற்றோர் மற்றும் விஎச்பி அமைப்பு குற்றச்சாட்டு

DIN

தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில் சமீபத்தில் மீட்கப்பட்ட பெண் இளைஞர் ஒருவருடன் மாயமான நிகழ்வினை லவ் ஜிகாத் என பெண்ணின் பெற்றோரும் விஷ்வ ஹிந்து அமைப்பினரும் தெரிவிக்க கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்ணின் தந்தை மங்களூரு காவல் ஆணையரிடம் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகள் கடத்தப்பட்டு இளைஞரால் மதமாற்றம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இதனை லவ் ஜிகாத் எனத் தெரிவித்துள்ளனர்.

மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த பெண் தொடர்பு கொள்ள இயலாத நிலைக்கு சென்றபோது அவரை காணவில்லை என பண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

காவலர்கள் அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்தபோது அவர் முகமது அஷ்பக் என்பவருடன் இருந்துள்ளார்.

காவலர்கள் இளைஞரின் பின்னணியை விசாரித்தபோது அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதும் அவர் மீது கேரளத்தின் காசர்கோடு நகருக்கு அருகிலுள்ள வித்யாநகர் காவல் நிலையத்தில் எட்டு குற்றவியல் வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மூத்த விஎச்பி தலைவர் சரண் பம்ப்வெல், கர்நாடகத்தின் கடற்கரை நகரங்களில் லவ் ஜிகாத் அதிகளவில் நடைபெறுவதாகவும் ஹிந்து மக்கள் விழிப்படைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

பெண் தானாகவே விருப்பப்பட்டு அந்த இளைஞருடன் சென்றாரா அல்லது வற்புறுத்தப்பட்டாரா என்பதை அறிய காவலர்கள் பெண்ணின் வாக்குமூலம் பெறவுள்ளனர். மேலதிக விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

22 சத ஈரப்பதத்துடன் நெல்கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

நலிவடைந்து வரும் மண் பானை விற்பனை: தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கோரிக்கை

சாலை விரிவாக்கப் பணிக்கு வெட்டப்பட்ட மரம் மறுநடவு

கோரிக்கை அட்டை அணிந்து அரசு மருத்துவா்கள் பணி

பாபநாசம் அருகே வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கி மூன்றரை பவுன் நகைகள் கொள்ளை

SCROLL FOR NEXT