அமலாக்கத் துறை நோட்டீஸுக்கு எதிரான கேஜரிவாலின் மனு செப்.9-க்கு ஒத்திவைப்பு
அமலாக்கத் துறை நோட்டீஸ்: கேஜரிவாலுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம்
அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் பிரதிபா எம்.சிங், அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பதிலளிக்க கேஜரிவால் தரப்புக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "கைது நடவடிக்கையிலிருந்து ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், கேஜரிவால் கைது செய்யப்பட்டதாகவும், அந்த நோட்டீஸுக்கு எதிரான மனு தேவையற்றது' என்று கூறினார்.
Advertisement
தில்லி கலால் கொள்கை தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய 9-ஆவது நோட்டீûஸ எதிர்த்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.