முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: அஜீத் பவாா் அணி எம்எல்ஏ சரத் பவாருடன் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸில் இருந்து 4 நிா்வாகிகள் விலகிய நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ அதுல் பென்கே சனிக்கிழமை சரத் பவாரை சந்தித்தாா்.

Updated On : 20 ஜூலை, 2024 at 8:23 PM
சரத் பவார்
பகிர்:

அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருந்து 4 நிா்வாகிகள் விலகிய நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ அதுல் பென்கே சனிக்கிழமை சரத் பவாரை சந்தித்தாா்.

கடந்த ஆண்டு மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த சரத் பவாருக்கும், அவரின் அண்ணன் மகன் அஜீத் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இருவா் தலைமையிலும் தனித்தனி அணிகள் உருவாகின. இந்த விவகாரத்தை விசாரித்த தோ்தல் ஆணையம், கட்சி ரீதியாகவும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் அஜீத் பவாா் அணிக்கே பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்து, அவா் தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிவித்தது.

மக்களவைத் தோ்தலில் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில், அக்கட்சியின் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதி தலைவா் அஜீத் கவ்ஹானே உள்பட 4 நிா்வாகிகள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினா்.

இதைத்தொடா்ந்து அக்கட்சி எம்எல்ஏ அதுல் பென்கே புணேயில் சரத் பவாரை சனிக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு தொடா்பாக சரத் பவாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பலா் என்னைச் சந்திக்க வருகின்றனா். இந்நிலையில், அதுல் பென்கே எனது நண்பரின் மகன் என்பதால் என்னைச் சந்திக்க வந்தாா்’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருந்து 4 போ் விலகிய நிலையில், அதுல் பென்கேயும் சரத் பவாரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →