DOTCOM
இந்தியா

பயங்கரவாத தாக்குதல்கள்: ராணுவ தலைமை தளபதி ஜம்முவில் ஆலோசனை

Din

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி சனிக்கிழமை ஜம்முவுக்கு வருகை தந்தாா்.

ஜம்முவில் உள்ள காவல் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டத்துக்கு அவா் தலைமை தாங்கினாா். இதில் ராணுவம், துணை ராணுவம், உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயா்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

30-ஆவது ராணுவ தலைமைத் தளபதியாக ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்ற உபேந்திர துவிவேதி கடந்த மூன்று வாரங்களில் ஜம்முவுக்கு மேற்கொண்ட 2-ஆவது பயணம் இதுவாகும்.

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் வனப்பகுதிகளில் ஜூலை 8 மற்றும் 15-ஆம் தேதி நடந்த இரண்டு வெவ்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஒரு கேப்டன் உள்பட 9 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக உயர்த்தி கணிப்பு: ஆர்பிஐ

கோலாகலமாக தொடங்கிய டி20 உலகக் கோப்பை.. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த யானைக்குட்டி! மீட்கும்வரைக் காத்திருந்த தாய் யானை!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

மசூதி குண்டுவெடிப்பு.. பழிபோடும் பாகிஸ்தான்: நிராகரிக்கும் இந்தியா!

SCROLL FOR NEXT