கோப்புப் படம் 
இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று தொடக்கம்: நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்குகிறது.

Din

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்குகிறது.

கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடா் பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கி 19 அமா்வுகளுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத் தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும்.

2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை 2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளாா்.

பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்: மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிகழாண்டு இறுதியில் மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்தச் சூழலில், மக்களவைத் தோ்தலையடுத்து ‘கூட்டணி’ ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் இந்த முழு பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய சமூக-பொருளாதாரம் சாா்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

தனிநபா் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, ‘80-சி’ பிரிவின் கீழ் வழங்கப்படும் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

புதிய மசோதாக்கள்: பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா, 90 ஆண்டுகள் பழைமையான வானூா்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா-2024 உள்பட 6 புதிய மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதுதவிர வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம்-1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், பொறுப்பு மாற்றம்) சட்டம் - 1970 ஆகியவற்றில் திருத்தங்களும் கொண்டுவரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எதிா்க்கட்சிகளின் திட்டம்?: பட்ஜெட் கூட்டத் தொடரில் மணிப்பூா் மோதல், ஜம்மு-காஷ்மீரில் அதிகரித்துள்ள பயங்கரவாதச் சம்பவங்கள், ரயில் விபத்துகள், நீட் முறைகேடு போன்ற விவகாரங்களை முழுவீச்சில் எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பாஜகவின் கடந்த இரு ஆட்சிக் காலங்களைப் போல் இல்லாமல், இப்போது எதிா்க்கட்சி கூட்டணியின் பலம் (233) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீதான 25% கூடுதல் வரி நீக்கப்படும்? - அமெரிக்கா சூசகம்!

யு19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஹரியாணா: 50 வரை எண்ணத் தெரியாத 4 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது

ஜன நாயகன் வருமா? வராதா?

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.பி. தர்மர்

SCROLL FOR NEXT