முகப்பு
இந்தியா

பிகாரில் தனியாகக் கழன்று சென்ற ரயில் என்ஜின்! பெரும் விபத்து தவிர்ப்பு!

பிகாரில் ரயில் விபத்து தவிர்ப்பு! தனியாகப் பிரிந்து சென்ற ரயில் என்ஜின்

Updated On : 29 ஜூலை 2024, 5:14 pm IST
- கோப்புப்படம்
பகிர்:

பிகாரில் இன்று(ஜூலை 29) பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ‘பிகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின்’ என்ஜின் இன்று காலை 10 மணியளவில் குதிராம் போஸ் பூசா ரயில் நிலையத்துக்கும் கர்ப்பூரி கிராம் ரயில் நிலையத்துக்கும் இடையே பயணித்துக் கொண்டிருக்கும்போது, தனியாகக் கழன்று சென்றுள்ளது.

இதையடுத்து ரயில் என்ஜின் மட்டும் தனியாக ரயில் பாதையில் பயணித்து சிறிது துரம் சென்றுள்ளது. இதன்காரணமாக, மீதமுள்ள ரயில் பெட்டிகள் நடு வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நல்வாய்ப்பாக ரயில் மிதமன வேகத்தில் இயக்கப்பட்டதால் ரயில் பெட்டிகள் எதுவும் தடம் புரளவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்த தகவல் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள குதிராம் போஸ் பூசா ரயில் நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிய வரவே, அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரத்தில் ரயில் என்ஜின் பெட்டிகளுடன் பொருத்தப்பட்டு அதன்பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

ரயில்என்ஜின் பிரிந்து சென்றதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments