'தாயின் பெயரில் ஒரு மரம்': பிரதமர் மோடி
உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் பிரதமர் மோடி பங்கேற்பு
உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இன்று (ஜுன் 5) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் ஒரு மரக்கன்றை நட்டார். பின்னர் ’தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மரங்கள் நடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா ஆகியோரும் பங்கேற்றனர்.