கோப்புப் படம் 
இந்தியா

புணேவில் மதுபோதையால் மீண்டும் ஒரு விபத்து!

புணேவில் மதுபோதையினால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் காயம்

DIN

புணேவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

புணேவில், இன்று (ஜூன் 14) 21 வயது இளைஞர் மது அருந்திவிட்டு எஸ்யூவி ரகக் காரை இயக்கியுள்ளார். மதுபோதையில் காரை ஓட்டியதால், கார் சாலையிலுள்ள தடுப்பின் மீது மோதியுள்ளது. கார் சாலைத் தடுப்பின் மீது மோதியதில், காரின் ஒரு சக்கரமானது கழன்று, அருகில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியுள்ளது. இதனால், ஆட்டோ நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் பின்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால், அந்த இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம், 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு போர்ஷே காரை ஓட்டிய விபத்தில் இருவர் பலியாகி இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம்?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! | DMK | TNGovt

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!

SCROLL FOR NEXT