ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து!
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலின் இரண்டு காலி பெட்டிகளில் இன்று தீப்பிடித்து எரிந்தன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செகந்திராபாத் தீயணைப்பு நிலைய அதிகாரி டி.மோகன் ராவ் கூறுகையில், "இன்று காலை 10.50 மணியளவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபத் ரயிலில் உள்ள பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது.
Advertisement
Advertisement
5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.