இந்தியா

ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து!

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலின் இரண்டு காலி பெட்டிகளில் இன்று தீப்பிடித்து எரிந்தன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செகந்திராபாத் தீயணைப்பு நிலைய அதிகாரி டி.மோகன் ராவ் கூறுகையில், "இன்று காலை 10.50 மணியளவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபத் ரயிலில் உள்ள பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது.

5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பன் பகுதியில் கடல் சிற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

SCROLL FOR NEXT