வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள யோகா தின நிகழ்வுகளில் பங்கேற்க ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இருநாள் பயணமாக ஸ்ரீநகருக்கு சென்றுள்ள மோடியின் சிறப்பு விமானம் அங்கு மாலை 5.20 -க்கு தரையிறங்கியது.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் ஜம்மு-காஷ்மீர் பயணம் இது.
ஜம்மு- காஷ்மீர் தலைமைச் செயலர் அடல் டல்லு, லெப்டினண்ட் சுசீந்திர குமார் மற்றும் டிஜிபி ஆர்ஆர் ஸ்வைன் ஆகியோர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அங்கிருந்து ஷெர்-இ-காஷ்மீர் பன்னாட்டு மாநாட்டு மையத்துக்கு சென்ற பிரதமர் மோடி இளைஞர்கள் மேம்பாட்டு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
இந்தத் திட்டம் இளைஞர்களை மேம்படுத்த உதவும் எனவும் அதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் மாற்றம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.