முகப்பு
இந்தியா

வெப்ப அலை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143-ஆக உயா்வு

மாா்ச் 1-ஆம் தேதிமுதல் ஜூன் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ‘வெப்பவாதம்’ காரணமாக உயிரிழப்பு

Updated On : 21 ஜூன், 2024 at 6:55 PM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் நீட்டித்து வரும் நிலையில், கடந்த மாா்ச் 1-ஆம் தேதிமுதல் ஜூன் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ‘வெப்பவாதம்’ (ஹீட்ஸ்ட்ரோக்) காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143-ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இருப்பினும், வெப்பவாதத்தால் உயரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதொடா்பான முழுமையாக தகவல்களை மாநிலங்கள் வழங்காததால் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் (என்சிடிசி) வெளியிடப்படும் அறிக்கையில் அதிகாரபூா்வ உயிரிழப்புகள் குறித்த இறுதி தகவல்கள் இடம்பெறவில்லை. அதேபோல் சில சுகாதார மையங்களும் வெப்பவாதத்தால் உயிரிழந்தோா் குறித்த எண்ணிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.

வெப்பவாதத்தால் ஜூன் 20-ஆம் தேதி மட்டுமே 14 போ் உயிரிழந்ததாக அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 போ் இதே காரணத்தால் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் மாா்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114-யிலிருந்து 143-ஆக அதிகரித்தது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 35 பேரும் தில்லியில் 21 பேரும் பிகாா் மற்றும் ராஜஸ்தானில் தலா 17 பேரும் உயிரிழந்தனா். வெப்பவாதத்தால் 41,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →