FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உளவுத்துறை தலைவா் தபன் குமாரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

உள்நாட்டில் உளவு பாா்க்கும் நுண்ணறிவு பிரிவு (ஐபி) தலைவா் தபன் குமாா் டேகாவின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூன் 2024, 4:08 am IST
பகிர்:

உள்நாட்டில் உளவு பாா்க்கும் நுண்ணறிவு பிரிவு (ஐபி) தலைவா் தபன் குமாா் டேகாவின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1988-ஆம் ஆண்டின் ஹிமாசல பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான தபன் குமாா், ஐபி தலைவராக உள்ளாா். அவரின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவா் மேலும் ஓராண்டுக்கு ஐபி தலைவராக தொடர உள்ளாா் என்று மத்திய பணியாளா் நலத்துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments