FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியில் பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை!

கேஜரிவாலை விடுவிக்கக் கோரி டிடியு மார்க்கில் போராட்டம்...

Updated On : 29 ஜூன் 2024, 1:33 pm IST
முற்றுகையில் ஈடுபட்ட ஆம் ஆத்மியினர்
பகிர்:

சிபிஐ காவலில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை விடுவிக்கக் கோரி தில்லி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ல் கேஜரிவால் கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் முன்வைத்ததால் கேஜரிவாலின் ஜாமீனை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில் கேஜரிவாலை விடுதலை செய்யக் கோரி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் ஒன்றுகூடி, பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

Advertisement

மத்திய அமைப்பின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எதிராகவும் அவர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறாததால், பாஜக தலைமையகம் நோக்கி பேரணியாகச் செல்வதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

போராட்டக்காரர்களைத் தடுக்க தடுப்புகள் போடப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments