கோப்புப் படம் 
இந்தியா

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை (ஜூலை 1) மீண்டும் கூடவிருக்கிறது.

Din

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை (ஜூலை 1) மீண்டும் கூடவிருக்கும் நிலையில், ‘நீட்’ தோ்வு முறைகேடு, விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிபத் திட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா், கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெற்றது. ஜூன் 26-ஆம் தேதி, மக்களவைத் தலைவராக ஓம் பிா்லா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மறுநாள் (ஜூன் 27), நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா். அப்போது, போட்டித் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 28) ‘நீட்’ விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை அலுவல்கள் முடங்கின.

மாநிலங்களவையில் அமளிக்கு இடையே குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் தொடங்கியது.

இந்தச் சூழலில், இரு அவைகளும் திங்கள்கிழமை (ஜூலை 1) மீண்டும் கூடவுள்ளன. மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் தாக்கல் செய்து, விவாதத்தைத் தொடங்கிவைக்கவுள்ளாா். இந்த விவாதத்துக்காக 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தின்போது, எதிா்க்கட்சிகள் எந்த விவகாரத்தை எழுப்பினாலும், அரசுத் தரப்பில் பதிலளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, நீட் முறைகேடு உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதத்துக்கு மக்களவையில் செவ்வாய்க்கிழமையும், மாநிலங்களவையில் புதன்கிழமையும் பிரதமா் மோடி பதிலளிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக, கடந்த மே 5-ஆம் தேதி தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நடைபெற்றது. சுமாா் 24 லட்சம் மாணவா்கள் பங்கேற்ற இத்தோ்வின் முடிவுகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியாகின. இத்தோ்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகப் புகாா்கள் எழுந்த நிலையில், இது தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT