இந்திய ராணுவத் தளபதியாக உபேந்திர திவிவேதி பொறுப்பேற்பு
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.
இந்திய ராணுவத் தளபதியாகப் பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் 30-வது தலைமைத் தளபதியாக இன்று (ஜூன். 30) பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெனரல் உபேந்திர திவிவேதி.
மத்திய பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர், குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.