தபால் ஓட்டுக்கான வயது வரம்பு உயர்வு
தபவால் ஓட்டுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வசதிக்கான வயது வரம்பு 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அஞ்சல் ஓட்டு வசதியை பயன்படுத்தி வந்த நிலையில் மத்திய அரசு வயது வரம்பை உயர்த்தியிருக்கிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்தே வாக்களித்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசனை நடத்தியே இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, மக்களவை மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இனி 85 மற்றும் அதற்கு மேல் வயதானவர்கள் மட்டுமே அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வயது வரம்பு 80 ஆக இருந்தது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், தேர்தல் நடத்தை விதி 1961-ன்படி, அஞ்சல் ஓட்டு வசதியை பின்பற்றும் முதியவர்கள் என்று 80 வயதானவர்கள் என்பதை மாற்றி, தற்போது 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று திருத்தியமைத்துள்ளது. இந்த முடிவானது, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசனை நடத்தியே அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வசதியைப் பின்பற்றி, அத்தியாவசிய சேவை ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா பாதித்தவர்கள், மூத்த குடிமக்கள் வாக்களிக்கலாம்.
பிப்ரவரி வெளியான வாக்காளர் பட்டியல் விவகரத்தின் அடிப்படையில், மொத்தமுள்ள 96.88 கோடி வாக்காளர்களில் 1.85 கோடி வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.