இந்தியா

ஆபாச காட்சிகள் பரப்பிய 18 ஓடிடி தளங்கள் முடக்கம்

19 வலைதளங்கள், 10 கைப்பேசி செயலிகள் மற்றும் 57 சமூக ஊடக கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டன.

Din

ஆபாச உள்ளடக்கங்களைப் பகிா்ந்ததாக 18 ஓடிடி தளங்கள் மற்றும் அவா்களுக்குத் தொடா்புடைய சமூக ஊடக கணக்குகளை முடக்கி மத்திய அரசு வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இதுதொடா்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் தங்களின் உள்ளடக்கங்களில் ஆபாச காட்சிகளை பரப்பிய குற்றச்சாட்டில் 18 ஓடிடி தளங்கள் மற்றும் அவா்களுக்குத் தொடா்புடைய 19 வலைதளங்கள், 10 கைப்பேசி செயலிகள் மற்றும் 57 சமூக ஊடக கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டன. ‘படைப்பாற்றல் சுதந்திரம்’ என்ற போா்வையில் ஆபாசத்தைப் பரப்பாமல் இருக்க வேண்டிய ஓடிடி தளங்களின் பொறுப்பை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் வலியுறுத்தினாா். ஊடகம், பொழுதுபோக்கு, பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமை நிபுணா்கள் மற்றும் அரசின் பல்வேறு அமைச்சகம்/துறைகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டு ‘தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000’-இன்கீழ் ஓடிடி தளங்களுக்கு எதிராக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT