DOTCOM
DOTCOM
இந்தியா

தில்லியில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: இருவர் பலி

DIN

புதுதில்லி: தில்லியில் பழைய இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் உயிரிழந்தனர்.

தில்லி கபீர் பகுதியில் உள்ள பழைய இரண்டு மாடிக் கட்டடத்தில் முதல் தளம் காலியாகவும், தரைத் தளத்தில் சிறிட ஆடை தயாரிப்பு கடையும் இயங்கி வந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில், தரைத் தளத்தில் உள்ள கடையில் பணிபுரிந்த அர்ஷத்(30) மற்றும் தெளஹித்(20) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ரெஹான்(22) என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மேலும், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டடத்தில் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT