இந்தியா

கேஜரிவாலை கண்டு பாஜகவுக்கு அச்சம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

DIN

கேஜரிவாலை கண்டு பாஜக அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதல்வர் பவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், கேஜரிவால் கைது செய்யப்படுவார் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். கேஜரிவால் போன்ற பெரிய தலைவர் பிரசாரம் செய்வதை அவர்கள் (பாஜக) விரும்பவில்லை. மக்களவைத் தேர்தலில் கேஜரிவால் பிரசாரம் செய்வதை தடுக்கவே அவரை மத்திய பாஜக அரசு கைது செய்துள்ளது.

அவரைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. எனவேதான், அவரையும் ஆம் ஆத்மி கட்சியையும் அழிக்க விரும்புகிறார்கள். அரசியல் ரீதியால் பழிவாங்கும் நோக்குடனேயே கேஜரிவால் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சரத் ரெட்டி, கேஜரிவாலை சந்திக்கவே இல்லை என்று முதலில் கூறியிருந்தார்.

சிறையில் விசாரணை நடத்தியபோது கேஜரிவாலை சந்தித்து உள்ளதாக சரத் ரெட்டி கூறியுள்ளார். தற்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சரத் ரெட்டி ரூ.55 கோடி கொடுத்திருப்பது அம்பலமாகி உள்ளது. கேஜ்ரிவாலுக்கு எதிரான விசாரணை அமைப்பின் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை மற்றும் நிரூபிக்கப்படாதவை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

மக்களவைத் தோ்தலுக்கான கேஜரிவாலின் உத்தரவாதங்களை அறிவித்தாா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

நான்குனேரி அருகே மிரட்டல் விடுத்தவா் கைது

கருங்கல் பகுதியில் மிதமான மழை

திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT