படம் | பிடிஐ
இந்தியா

ராணுவ வீரர்களுக்கு திலகமிட்டு ஹோலி பண்டிகையை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் இணைந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

DIN

லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு திலகமிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹோலி கொண்டாடினார்.

ஹோலி பண்டிகையை வட இந்தியாவில் மக்கள் இன்று (மார்ச். 24) விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் இன்று(மார்ச். 24) ராணுவ வீரர்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடப் போவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இன்று(மார்ச். 24) லடாக்கில் உள்ள டேஹ் ராணுவ தளத்துக்குச் சென்ற ராஜ்நாத் சிங், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, “லடாக் என்பது சியாச்சின், கார்கில், பாரத மாதாவின் பூமி. லடாக் தேசிய தீர்மானத்தை குறிக்கிறது. நமது அரசியல் தலைநகரம் டெல்லி, நமது பொருளாதார தலைநகரம் மும்பை மற்றும் நமது தொழில்நுட்ப தலைநகரம் பெங்களூரு. அதேபோல, வீரத்தின் தலைநகரமாக லடாக் திகழ்கிறது” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டு டிரைலர்!

"FESTIVAL OF SPEED” சாகச நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த கார் மற்றும் பைக்குகள்! | Coimbatore

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரும் போராட்டத்தை ஆதரிக்கிறோம்: இந்திய கம்யூ. செயலர் வீரபாண்டியன்

நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!

SCROLL FOR NEXT